Description
குற்றாலப் பகுதியில் அமைந்திருக்கும் தன் தோப்பை விற்க முயல்கிறார் தேவர். அதை வாங்க எண்ணுபவரின் சகோதரன் அர்ஜுனும் சகோதரி மீனாவும் தோப்பைப் பார்க்க வருகின்றனர். வந்ததிலிருந்தே அமானுஷ்யச் செய்திகள், காட்சிகள்! அப்படி ஆரிய வனம் மறைத்து வைத்திருக்கும் இரகசியம்தான் என்ன? இதற்கும் மீனாக்ஷியின் மகாபாரத ஆய்வுக்கும் என்ன தொடர்பு?தென்காசி, நான் வளர்ந்த ஊர். தென்காசித் தென்றலும் குற்றாலச் சாரலும்தான் என் தமிழை வளர்த்தன, கவிதை அளித்தன.கதைகளுக்குள் நான் நுழைந்தபோது, தென்காசி, குற்றாலப் பகுதிகளை மையமாகக் கொண்டு ஒரு முழுநீள நாவல் எழுத வேண்டும் என்பது நீண்ட நாட்களாக என் ஆவலாக இருந்தது. அந்த ஆவல் ‘ஆரிய வனம்’ மூலம் நிறைவேறியது. படித்துக் கருத்துரைக்குமாறு தமிழ்கூறும் நல்லுலகை வேண்டுகிறேன்.







Reviews
There are no reviews yet.